Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேரள முதல்வரை அய்யப்பன் வதம்: ... பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் ஐப்பசி பவுர்ணமி பூஜை பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தாமிரபரணி புஷ்கரம்: 23 லட்சம் பேர் புனித நீராடல்
எழுத்தின் அளவு:
தாமிரபரணி புஷ்கரம்: 23 லட்சம் பேர் புனித நீராடல்

பதிவு செய்த நாள்

26 அக்
2018
12:10

சென்னை, மஹா புஷ்கரம் விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றில், 23 லட்சம் பேர் புனித நீராடினர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பு அளித்த போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன் பாராட்டு தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில் ஓடும் தாமிரபரணி ஆற்றில், அக்., 11 முதல், 23ம் தேதி வரை, மஹா புஷ்கரம் விழா நடைபெற்றது.

விழா நடந்த, 13 நாட்களிலும், புனித நீராடுதல் மற்றும் ஆரத்தி எடுத்து வழிபடும் நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக, திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டத்தில், தாமிர பரணி ஆற்றில், 60 படித்துறைகள் தேர்வு செய்யப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில், ஒரு படித்துறையும் தேர்வு செய்யப்பட்டது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், துணை முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்பட, 23 லட்சம் பேர் புனித நீராடி உள்ளனர். பாதுகாப்பு பணியில், 6,828 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.படித்துறைகளில், மீட்பு வாகனங்கள், பைபர் படகுகள், பேரிடர் மீட்பு உபகரணங்கள், நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற போலீசார் தயார் நிலையில் இருந்தனர். ஒவ்வொரு படித்துறையிலும், புறக்காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.மஹா புஷ்கரம் விழாவில், காணாமல் போன, 17 சவரன் நகை, 30 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும், நான்கு மொபைல் போன்களை போலீசார் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல், மஹா புஷ்கரம் விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, டி.ஜி.பி., - டி.கே.ராஜேந்திரன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வாயிலாக பாராட்டு தெரிவித்து உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar