புதுடில்லி: டில்லியில் இருந்து, ராமாயண இதிகாசத்துடன் தொடர்புடைய இடங்களுக்கு செல்ல, ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயிலை, இந்திய ரயில்வே, சமீபத்தில் அறிவித்தது. முதல் ரயிலுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் மற்றும் தமிழகத்தின் மதுரையில் இருந்து, மூன்று ராமாயணா எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.