பதிவு செய்த நாள்
01
நவ
2018
12:11
கன்னிவாடி : தோணிமலை முருகன் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய அபி
ஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர். கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கப் பெருமாள் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், அஷ்டமி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.