Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனூர் கோவிலில் தேர்கட்டும் ... கடையம் முப்புடாதியம்மன் கோயில் முன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொக்காபுரம் மாரியம்மன் தேர் திருவிழா 24ம் தேதி துவக்கம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 பிப்
2012
10:02

ஊட்டி :மசினகுடி அருகேயுள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. சோலூர் மலை அடிவாரத்தில் உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில், மாரியம்மனுடன் மசினியம்மன், சிக்கம்மன், கரியபெட்டன் ஐயன் வீற்றிருந்து, அருள் பாலித்து வருகின்றனர். மசினகுடி, மாயார், சிறியூர், ஆனைக்கட்டி, சொக்கநல்லி, சோலூர் போன்ற கிராம மக்களின் குலதெய்வமாக உள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதம் ரிஷப லக்னத்தில் நடக்கும் தேரோட்டத்தில், பொக்கா அம்மன், மசினி அம்மன் சிக்கம்மன், சீரியம்மன், ஆனைக்கல் அம்மன், கொக்கரல்லி அம்மன், தண்டுமாரியம்மன் ஆகியோர், ஒரு சேர பக்தர்களுக்கு அருள்பாலிப்பது ஐதீகமாக உள்ளது. நடப்பாண்டு திருவிழா, வரும் 24ம் தேதி மாலை 6.00 மணியளவில், அம்மனுக்கு திருவிளக்கு ஏற்றல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. 25ம் தேதி அம்மனுக்கு அபிஷேகம், கங்கை பூஜை நடக்கிறது. 27ம் தேதி இரவு 10.00 மணியளவில், மாரியம்மன் திருத்தேர் ஊர்வலம் துவங்குகிறது. ஊட்டி எம்.எல்.ஏ., புத்திசந்திரன், மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி., நிஜாமுதீன், கோவை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்திரன், உதவி ஆணையர் ஆறுமுகம், சோலூர் பேரூராட்சி தலைவர் சித்தன் உட்பட பலர் பங்கேற்று வடம் பிடிக்கின்றனர். 28ம் தேதி மாவிளக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், சோலூர் கிராம மக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், உபயதாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் நுழைவுக் கட்டணம் உட்பட பல்வேறு கட்டணங்களை வசூலிக்க தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், முறைகேடுகள் நடக்காமல் இருக்க, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar