பதிவு செய்த நாள்
16
நவ
2018
02:11
பள்ளிபாளையம்: பள்ளிபாளையத்தில், பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உண்டியல், நேற்று (நவம்., 15ல்) திறக்கப்பட்டது. பள்ளிபாளையம், ஆர்.எஸ்.சாலையில், பிரசித்தி பெற்ற கண்ணனூர் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடி 18 ல், திருவிழா நடைபெறும். பொதுமக்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிடுவர். வெள்ளிகிழமை கூட்டமாக இருக்கும். இந்தாண்டும், ஆடி 18 திருவிழா சிறப்பாக நடந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் திருச்செங்கோடு சரக அறநிலையத்துறை ஆய்வாளர் சுந்தர், செயல் அலுவலர் சாந்தி ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது, பக்தர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 62 ஆயிரத்தி, 761 ரூபாய் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.