திருப்பரங்குன்றம்: தென் திருப்பதி எனப்படும் ஸ்ரீவில்லிப்புத்தூர் திருவண்ணாமலை கோயி லில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் விளாச்சேரியில் ""மெகா ” களிமண் அகல் விளக்குகள் தயாராகின்றன.
இங்கு 200 குடும்பங்கள் களிமண், பிளாஸ்டர் ஆப் பாரிஸ், காகிதக்கூழ், சிமென்ட் மூலம் சீசனுக்கு ஏற்றாற் போல் பொம்மைகள் தயாரிக்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொம்மை கள், சிலைகள், அகல் விளக்குகள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு செல்கின்றன. கார்த்திகையை முன்னிட்டு தற்போது களிமண்ணால் ஒரு இஞ்ச் முதல் அகல் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் கார்த்திகை தீபத்திற்காக 2 அடி உயரம், 2 அடி அகலத்தில் 6 அகல் விளக்குகள் களிமண்ணில் தயாரிக்கப் படுகிறது.
சாம்பசிவம் கூறியதாவது: 26 ஆண்டுகளாக அகல் விளக்குகள் தயாரித்து திருவண்ணா மலைக்கு அனுப்புகிறோம். களிமண்ணால் தயாரிக்கப்படும் பெரிய விளக்குகள் இவை. விளக்குகள் 30 லிட்டர் எண்ணெய் பிடிக்கும். மூன்று நாட்கள் எரியும். இத்துடன் இரு லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு அடி உயரத்தில் 25 விளக்குகளும், 100 மில்லி கொள்ளளவு கொண்ட 3 ஆயிரம் விளக்குகளும் தயாரிக்கப்படுகிறது என்றார்.