* மனதில் எழும் ஆசை நியாயமானதா என்று யோசித்து செயல்படுங்கள். * பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை. * துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும். * ஆடு, மாடுகள் கடித்து விடாதபடி செடிக்கு வேலியிடுவது போல, மனதிற்கு வைராக்கியம் என்னும் வேலி இட்டால் தீங்கு உண்டாகாது. * ஆசை என்னும் கை விலங்கை அறுத்து எறிந்தால், மனிதன் சுதந்திரப் பறவை போல வாழலாம்