* உயர் பதவியில் இருப்போர் கடைநிலை ஊழியர் போல பணிவுடன் இருந்தால் புகழ்நிலையில் முன்னணி வகிக்கலாம். * புலன்களுக்கு அடிமையாகக் கூடாது. அறிவால் ஆட்டுவிப்பவர்களாக மாற வேண்டும். * பொறாமை, சினம், தற்பெருமை போன்ற தீய குணங்களால் மனிதன் அமைதியின்றி தவிக்கிறான். * மூச்சுக்காற்று உயிரையும், உடலையும் இணைப்பது போல வழிபாடு மனிதனைக் கடவுளோடு சேர்க்கிறது. * நாலு பேருக்கு நல்லது செய்ய விரும்பினால் எதிர்ப்பைச் சந்திக்காமல் இருக்க முடியாது.