* உயர்ந்த நோக்குடன் வாழ்ந்தால் மனம் மட்டுமில்லாமல் உடம்பும் புனிதம் பெறும். * ஆயிரம் அறிவுரைகளை சொல்வதை விட, ஒரு செயலைச் செய்வது மேலாகும். * தான் பெற்ற அறிவு, ஆற்றல், செல்வம் அனைத்தையும் சமுதாயத்திற்குச் செலவழிப்பவன் போற்றத்தக்கவன். * உடல் நோய்க்கு எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. மன நோய்க்கு தன்னலம் அற்ற சேவையே மருந்து. * முதலில் குடும்பத்திற்கு சேவை செய்யுங்கள். அதன் பின் பொதுசேவையில் ஈடுபடுங்கள்.