Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோவிலில் நிகழ்ச்சி : ஆடை ... திருவண்ணாமலை தீப திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நோய்களை குணமாக்கும் முனியப்பன்: நுாதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
நோய்களை குணமாக்கும் முனியப்பன்: நுாதன முறையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

22 நவ
2018
12:11

மேட்டூர்: பாசக்கார நாயின் நோயை குணமாக்கியதால் மகிழ்ந்த பக்தர்கள், முனியப்பனுக்கு கிடா வெட்டி, நாயின் உருவ பொம்மை செய்து வைத்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேட்டூர் அடுத்த, காவேரிகிராஸில், பவானி நெடுஞ்சாலையோரம், முத்து முனியப்பன் கோவில் உள்ளது. பஸ், கனரக வாகன டிரைவர்கள் பலர், காலையில், முனியப்பனை வணங்கி விட்டு, பணியை தொடங்குகின்றனர். சுற்றுப்பகுதி பக்தர்கள், தங்கள் நோய் குணமாக, வேலை கிடைக்க, முனியப்பனை வணங்கி வேண்டுதல் வைக்கின்றனர். அவர்கள் வேண்டுதல் நிறைவேறினால், கோவில் வளாகத்தில் உருவபொம்மை செய்து வைப்பதோடு, கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.   

இதுகுறித்து, பூசாரிகள் கூறியதாவது:  ஓராண்டுக்கு முன், அருகில் வசிக்கும் பள்ளி மாணவி ஒருவருக்கு, தேர்வு நேரத்தில் உடல்நலம் பாதித்தது. அவர் உடல்நலம் சீராகி, நல்ல முறையில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற, பெற்றோர் வேண்டுதல் வைத்தனர். அது நிறைவேறியதால், பெற்றோர், வேண்டுதலை நிறைவேற்ற, மாணவி போலவே உருவபொம்மை செய்து, கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர். இளைஞர் ஒருவர், காவலர் வேலை கிடைக்க, வேண்டுதல் வைத்தார். வேலை கிடைத்ததால், சீருடை அணிந்த காவலர் பொம்மை செய்து வைத்து விட்டார். அருகிலுள்ள, நாட்டாமங்கலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர், நாயை மிகவும் செல்லமாக வளர்த்தார். இரு மாதங்களுக்கு முன், அது உடல்நலம் பாதித்தது. அது குணமடைய, முனியப்பனிடம் வேண்டினார். நாயும் குணமடைந்து விட்டது. தன் பாசக்கார நாய் குணமடைந்ததால் மகிழ்ச்சியடைந்த பக்தர், முனியப்பனுக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தியதோடு, தன் நாய் போன்ற உருவபொம்மையை செய்து, கோவில் வளாகத்தில் வைத்துள்ளார். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், உருவபொம்மை செய்து கோவில் வளாகத்தில் வைக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar