பதிவு செய்த நாள்
26
நவ
2018
11:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக தீர்த்த உற்ஸவம் நடந்தது. இக்கோயிலில் நவ.,15 துவங்கிய திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். நவ., 23 மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.தீர்த்த உற்ஸவத்தை முன்னிட்டு உற்ஸவர் சன்னதியில் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன், சத்தியகிரீஸ்வரர், வர்த்தனாம்பிகை
அம்பாள், அஸ்தரதேவர் எழுந்தருளினர். கார்த்திகை கொடியேற்றம் தொடங்கி தீர்த்த உற்ஸவம் வரை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து புஷ்ப அலங்காரமாகி தீபாராதனைகள் நடந்தன. உச்சிகால பூஜை முடிந்து, சுவாமி, தெய்வானை, சரவணப் பொய்கையில் எழுந்தருளினர். அங்கு ஆறுமுக சுவாமி சன்னதியில் பூஜை முடிந்து அஸ்தரதேவருக்கு சரவணப்பொய்கையில் தீர்த்த உற்ஸவம் நடந்தது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி அருள்பாலித்தார்.