பதிவு செய்த நாள்
08
டிச
2018
03:12
உடுமலை:உடுமலை, நவநீத கிருஷ்ண சுவாமி கோவில், வைகுண்ட ஏகாதசி விழா, இன்று துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு, வரும் 18ம்தேதி நடக்கிறது. உடுமலை, பெரியகடை வீதியிலுள்ள, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், வைகுந்த ஏகாதசி விழா, இன்று (டிசம்., 8ல்) பகல் பத்து உற்சவத்துடன் துவங்குகிறது.
மாலை, 4:00க்கு. திருப்பல்லாண்டு, திருமொழி பாராயணம் மற்றும் எம்பெருமாள் ஸ்ரீ மச்ச வதாரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 17ம் தேதி வரை, தினமும் பாசுரங்கள் சேவை, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், கூர்ம, ஹயக்கிரீவர், நரசிம்மர், வாமன, பரசுராம, கோதண்டராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அலங்காரங் களில், சுவாமி எழுந்தருளுகிறார்.முக்கிய நிகழ்ச்சியான, சொர்க்கவாசல் திறப்பு, வரும், 18 ம் தேதி நடக்கிறது. அதிகாலை, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறப்பு, கருட வாகனத்தில் எம்பெருமாள் எழுந்தருளல் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, பூமிநீளா நாயகி சமேத சீனிவாசப்பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.19ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ராப்பத்து திருவாய்மொழி உற்சவம் நடக்கிறது. தினமும், மாலை, 6:00 முதல், 8:00 வரை, திருவாய்மொழி பாசுரங்கள் சேவை மற்றும் தன்வந்திரி, திரிவிக்ரமன், மகா விஷ்ணு, தெப்ப உற்சவம், பாண்டு ரங்கன், வித்யா ராஜகோபாலன், நவநீதகிருஷ்ணன், ராமர் பட்டாபிஷேகம், விஸ்வரூப தரிசன அலங்காரங்களிலும், 28ம் தேதி, நம்மாழ்வார் மோட்ச நிகழ்ச்சியும் நடக்கிறது.