வால்பாறை:வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலின் மண்டல பூஜை திருவிழாவில் நேற்று (டிசம்., 16ல்) சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமிக்கு, 32ம் ஆண்டு மண்டல பூஜைத்திருவிழா கடந்த, 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடைபெறும் விழாவில் நேற்று, (டிசம்., 16ல்) புஞ்பாஞ்சலி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் தலைமை குருக்கள் கண்ணன், கல்லூரி விரிவுரையாளர் விஜயகுமார் பூஜைகளை நடத்தினர். தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை அகிலபாரத ஐயப்ப சேவா சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் சந்திரன், பொருளாளர் அழகிரி உட்பட பலர் செய்திருந்தனர்.