பதிவு செய்த நாள்
17
டிச
2018
12:12
சோமனூர்:சோமனூர் கிருஷ்ணாபுரம் சித்தி விநாயகர் கோவில், ஐயப்ப பக்தர்கள் சார்பில், ஐயப்பன் திருவிழா மற்றும் யானை ஊர்வலம் நேற்று (டிசம்., 16ல்) நடந்தது.
சோமனூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் இருந்து, ஆண்டுதோறும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து, விரதமிருந்து மலைக்கு செல்லும் ஐயப்பன் பக்கதர்கள் சார்பில், ஐயப்பன் திருவிழா பூஜை நடத்தப்படுகிறது. 23வது ஆண்டு திருவிழாவான நேற்று (டிசம்., 16ல்), ஐயப்பன் உருவச்சிலையை சப்பரத்தில் வைத்து அலங்கரித்து, செண்டை மேளங்கள் முழங்க, யானை ஊர்வலத்துடன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. 100க்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
ஐயப்பன் பக்தர்கள் சங்க தலைவர் சுப்பையா அய்த்தான் கூறுகையில், ஆண்டு தோறும் தவறாமல், ஐயப்பன் பக்தர்கள் சங்கம் சார்பில் இந்த திருவிழா தொடர்ந்து 23வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி கட்டி செல்லும் வரை, சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நிகழ்ச்சிகள் இங்கும் நடக்கும். முக்கிய நிகழ்ச்சியாக யானை ஊர்வலத்துடன் இந்த சப்பரத்திருவிழா நடத்தப்படுகிறது, என்றார்.