மல்லசமுத்திரத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்முதல் ஞாயிறு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2018 03:12
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு தாலுகா, மல்லசமுத்திரம் அடுத்த, காளிபட்டியில் கந்தசாமி கோவில் பின்புறத்தில், சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று (டிசம்., 16ல்), மார்கழி தமிழ் முதல் ஞாயிறு தினத்தையொட்டி, காலை, 10:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.