பதிவு செய்த நாள்
25
டிச
2018
12:12
விழுப்புரம்:கண்டாச்சிபுரத்தில், அகிம்சை நெடும்பயணம் மேற்கொண்ட ஜெயின் துறவி களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெயின் சமூகத் தலைமை குரு ஆசாச்சாரிய ஸ்ரீமஹாஷ்ராமன், கடந்த 2014ம் ஆண்டு முதல், அகிம்சையை வலியுறுத்தி, நெடும்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாடு முழுவதும் நடை பயணமாக பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் இத்துறவி, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சி புரம் பகுதியில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் செல்லும் வழியில், கண்டாச்சிபுரம் பழனிவேலு ஐ.டி.ஐ., வளாகத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு, ஆடிட்டர் ராஜேஷ், டாக்டர் மூர்த்தி தலைமை தாங்கினார்.பள்ளி நிர்வாகி தாளாளர் ராஜேந்திரன், தாளாளர் தேன்மொழி, பொறியாளர் புகழேந்தி முன்னிலை வகித்தனர்.இதில், ஐ.டி.ஐ., முதல்வர் சத்தியராஜ், நிர்வாக அலுவலர் தட்சிணாமூர்த்தி, பள்ளி முதல்வர் சங்கீதாஎனக்ஸ், வாழப்பட்டு திருவள்ளுவர் ஐ.டி.ஐ., முதல்வர் ஜெயச்சந்திரன் மற்றும் ஜெயின் சமூகத்தினர், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.