பதிவு செய்த நாள்
22
ஜன
2019
04:01
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடுத்த, வெள்ளியம்பாளையம், பவானி ஆற்றங்கரை யோரத்தில் பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில், கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப்பட்டதை அடுத்து, திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, கடந்த, 18ல், விநாயகர் வழிபாட்டுடன், கும்பாபிஷேக விழா தொடங்கியது.
அன்று காலை, பவானி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று முன்தினம் (ஜன., 20ல்) கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், விக்னேஸ்வரர் பூஜை நடந்தது. நேற்று (ஜன., 21ல்) காலை, 9:00 மணியளவில், கணபதி யாகம் மற்றும் யாகசாலை பூஜைகள் செய்து, கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது.
பின்னர், மூலவர் ஜலகண்டேஸ்வரருக்கு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஜேடர்பாளையம் முக்கிய வீதி வழியாக வலம் வந்த தேர், இரவு, 7:00 மணிக்கு நிலை நின்றது.