Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் கவுரி நட்சத்திர ... பழநியில் வற்றாத சுனையருகே வரமருளும் வள்ளி பழநியில் வற்றாத சுனையருகே வரமருளும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனியில் வேண்டுதலை நிறைவேற்றும் அரசமரத்தடி சக்தி விநாயகர்
எழுத்தின் அளவு:
தேனியில் வேண்டுதலை நிறைவேற்றும் அரசமரத்தடி சக்தி விநாயகர்

பதிவு செய்த நாள்

02 பிப்
2019
01:02

தேனி: ""ஆற்றங்கரை ஓரத்திலே அரசமரத்தடியிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் என கிராமங்களில் நீர்நிலை பகுதிகள் மட்டுமில்லாது, ஒவ்வொரு தெருக்களிலும் மரத்தடியில் விநாயகர் வீற்றிருக்கிறார். அவரை வழிபட்டு தான், அனைத்து செயல்களை செய்ய துவங்கும் வழக்கமும் பெரும்பாலானவர்களிடம் உள்ளது. இத்தகையை சூழலில் மிகப்பழமையான அரசமரத்தடி சக்தி விநாயகர் ஆதிப்பட்டியின் அடையாளமாக உள்ளார்.

கிராம மக்கள் கூறியதாவது: கடல் போல காட்சியளிக்கும் பூதிப்புரம் ராஜபூபாளம் கண்மாயில் இருந்து வரும் ஓடையின் கரையில் தான் இந்த அரசமரம் வளர்ந்தது. எங்களின் முன்னோர் மரத்தின் அடியில் விநாயகரின் சிலையை நிறுவி வழிபட துவங்கினர். பழமையான இம் மரத்தின் கிளை கடுமையான மழை காற்றில் ஓடிந்தாலும், மரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. காலப்போக்கில் ஓடையும் மறைந்து, பூதிப்புரம் செல்லும் மெயின் ரோடாக மாறிவிட்டது.

போக்குவரத்து வசதி அதிகமில்லாத காலங்களில் மஞ்சிநாயக்கன்பட்டி, வலையப்பட்டி, வாழையாத்துப்பட்டி, கெப்புரெங்கன்பட்டி மக்கள் தேனிக்கு கால்நடையாகவோ, மாட்டு வண்டியிலோ செல்லும் போது, சக்திவிநாயகரை வழிபட்டு தான் பயணத்தை துவங்குவர். வெளியூர் பயணிப்போரும் வழிபட்டே செல்வர்.

குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, உடல் நலம் உள்ளிடவைக்கு வேண்டி கொண்டு மக்கள் விநாயகரை வழிபடுகின்றனர். அது நிறைவேறுகிறது. புரட்டாசி பொங்கல், விநாயகர் சதுர்த்தி, தைப்பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடக்கும். கிராம கமிட்டி சார்பில் இக்கோயில் பராமரிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில், சூரியன் சிவாம்சம் கொண்டவர். இவர் தை மாதத்தில் தன் வடதிசைப் பயணத்தை தொடங்குகிறார். ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான, ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar