காஞ்சிப்பெரியவர் சித்தி அடைவதற்கு ஓராண்டுக்கு முன், உடல் தளர்ச்சியுற்ற நிலையில் சீடர்களை அழைத்தார். சிதம்பரம் நடராஜரைத் தரிசித்து, அங்கு சுவாமிக்கு அணிவிக்கப்படும் குஞ்சிதபாதத்தை தரிசிக்க வேண்டுமென்றும் கூறினார். குஞ்சிதபாதம் என்பது நடராஜருக்கு அணிவிக்கப்படும் மூலிகை வேர்களால் ஆன மாலை. இதை தரிசித்தவருக்கு நோய் தீரும். மோட்சம் கிடைக்கும். இதையறிந்த சீடர்கள் கலங்கினர். பெரியவருடன் சிதம்பரம் எப்படிச் செல்வது என ஆலோசித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் அதிகாலை சூரிய உதிக்கும் முன் சிதம்பரம் கோயிலில் உள்ள தீட்சிதர் சிலர், பெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர். வியப்பின் உச்சிக்கே போய் விட்டனர் சீடர்கள். அவர்களை உள்ளே வருமாறு சைகையால் அழைத்த பெரியவர், குஞ்சிதபாதத்தை தன் தலையில் வைத்து மகிழ்ந்தார். குஞ்சிதபாதத்துடன் உள்ள பெரியவர், நோய் தீர்க்கும் மருந்தாக போற்றப்படுகிறார். இந்த படத்தை பூஜையறையில் வைத்தால் நன்மை பெருகும்.