Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சேலம் பங்குனி உத்திர பூஜை: பக்தர்கள் ... பூசாரி மட்டுமே தீ மிதிக்கும் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் பங்குனி உத்திர திருவிழா: நாமக்கல்லில் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2019
03:03

நாமக்கல்: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, நாமக்கல் மற்றும் சுற்று வட்டார முருகன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

* நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில், காலை 9:00 மணிக்கு மகாசங்கல்பம், 11:30 மணிக்கு, 108 சங்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி சந்தனக் காப்பு அலங்கரத்தில் அருள் பாலித்தார்.

* நாமக்கல், கடைவீதி சக்தி கணபதி கோவில்,பாலதண்டாயுத பாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, முத்தங்கி அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

* நாமக்கல், மாருதி நகர், ராஜ விநாயகர் கோவிலில், கல்யாண சுப்பிரமணியர் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் அருள் பாலித்தார்.

* நாமக்கல் அடுத்த, என்.புதுப்பட்டி பாலதண்டாயுதபாணி கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.

* நாமக்கல், கருங்கல்பாளையம் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவிலில், சிறப்பு யாகம் செய்யப்பட்டு, பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

* ஆயிர வைசியர் செட்டியார் சமூகம் சார்பில், மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா நடந்தது. காலை, 7:30 மணிக்கு, கோவிலில்
இருந்து, பக்தர்கள், காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடினர். தொடர்ந்து, பால், பன்னீர், சந்தனம், தீர்த்தக்குடங்களுடன், காவடி எடுத்துக் கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக, கோவிலை அடைந்தனர். மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமி வெள்ளிக்கவசத்தில்எழுந்தருளினார்.

இரவு, 7:00 மணிக்கு, புஷ்ப அலங்காரத்தில், சுவாமி வீதிஉலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை சுப்ரமணியசுவாமி எனும் பெயரில் உள்ள முருகன் கோவிலில், தேர் திருவிழா நடந்ததையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 9:00 - 12:00 மணி வரை திருக்கல்யாண வைபோகம், நேற்று (மார்ச்., 21ல்), பால்குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் படிபூஜை செய்தனர். மாலை, திருத்தேர் தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

* ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம், ராசிபுரம், பள்ளிபாளையம், நாமகிரிப்பேட்டை என, மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,
அலங்காரம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar