Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலையில் பங்குனி மாத ... நாமக்கல் பங்குனி உத்திர திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் பங்குனி உத்திர பூஜை: பக்தர்கள் காவடியாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2019
03:03

சேலம்: பங்குனி உத்திரத்தையொட்டி, முருகன் கோவில்களில் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சேலம், குமரகிரி தண்டாயுதபாணி கோவிலில், கடந்த, 15ல், பங்குனி உத்திர உற்சவம் தொடங்கியது. நேற்று (மார்ச்., 21ல்) காலை, சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள், காவடியாட்டம் ஆடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தண்டாயுதபாணி, வள்ளி, தெய்வானையுடன், ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இரவில், சண்முக பெருமான் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்தார். அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், தனித்தனி சன்னதிகளில் உள்ள, மூலவர் சவுந்தரராஜர், சவுந்திரவல்லி தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில், பெருமாளுடன், தாயாரை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து, சேர்த்தி சேவை உற்சவம் நடந்தது.

ஊத்துமலை முருகன் கோவிலில், பாலசுப்ரமணியர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பெரமனூர் கந்தசாமி கோவிலில், வள்ளி, முருகனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சேலம் அருகே, காளிப்பட்டி, கந்தசாமி கோவிலில், மூலவர் கந்தசாமிக்கு, 16 வகை
மங்கல பொருட்களால் அபிஷேகம் செய்து, தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அதேபோல், ஏற்காடு, அடிவாரம் ஆறுபடை முருகன்; பேர்லேண்ட்ஸ் முருகன்; செவ்வாய்ப்பேட்டை
சித்திரைச்சாவடி முருகன், ஜாகீர்அம்மாபாளையம் காவடி பழனியாண்டவர் ஆசிரமம்; கந்தாஸ்ரமம்; இடைப்பாடி, கவுண்டம்பட்டி, முத்துக்குமார சுவாமி; இளம்பிள்ளை
பாலசுப்ரமணியர்; மகுடஞ்சாவடி சுப்ரமணியர்; மேட்டூர், தங்கமாபுரிபட்டணம், முருகன் உள்ளிட்ட, மாவட்டத்திலுள்ள முருகன் கோவில்களில், பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

* ஆத்தூர் அருகே, வடசென்னிமலை பாலசுப்ரமணியர் கோவிலில், நேற்று (மார்ச்., 21ல்) காலை, 6:00 மணிக்கு, 108 பால்குட அபிஷேக பூஜை, மாலை, 50 அடி உயர திருத்தேரை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக்குழுவினர், பக்தர்கள் இணைந்து, வடம் பிடித்து இழுத்தனர். ஏராளமான பக்தர்கள், தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று நடந்த கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், வேகவதி ஆற்றங்கரையோரம், 16ம் நுாற்றாண்டின் விஜயநகரப் பேரரசு கால சதிகல் சிற்பம் ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், மங்கள வேல் வழிபாடு நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள பல்லி சிலைகள் மாற்ற முயற்சி நடப்பதாக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பணாமுடீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள அரசமர செடிகளால் சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar