மயிலம்:மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர பெரு விழாவில் முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது.அதனையொட்டி, மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவில் பங்குனி உத்திர பெரு விழாவை முன்னிட்டு காலை 6;00 மணிக்கு சுவாமிக்கு நறுமணப் பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாரதனை, வழிபாடு நடந்தது.
காலை 11;00 மணிக்கு விமானத்தில் உற்சவர் கிரிவல காட்சி நடந்தது. பிற்பகல் 12:00 மணிக்கு மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலை 6:00 மணிக்கு மயிலம் திருக்கோவில் குறித்த மேடை நாடகம் நடந்தது.இரவு 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.