சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரத்தில் பழமையும், புரதான சிறப்பும் பெற்ற சிவன் கோயில் அமைந்துள்ளது. கி.பி., 1236ல் திரிபுவன சக்கரவர்த்தி மாறவர்ம சுந்தரபாண்டியனால் எழுப்பப்பட்ட சிவகாமி சமேத திருவனந்தீஸ்வரமுடையார் கோயில் பிரசித்தி பெற்றதாகும்.
நேற்று காலை 6:00 மணிக்கு கோமாதா பூஜையும், காலை 9:00 மணிக்கு உற்ஸவ மூர்த்திகளுக்கு திருக்கல்யாண உற்ஸவமும் நடந்தது.மூலவர் திருவனந்தீஸ்வரமுடையாருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது.ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்று, பஜனை, நாமாவளி, சிவபுராணம் பாடி வழிபாடு செய்தனர். பகலில் அன்னதானமும், மாலையில் உற்ஸவ மூர்த்திகளின் திருவீதியுலாவும் நடந்தது.பூஜைகளை செந்தில்குமார் செய்திருந்தார். ஏற்பாடுகளை அனந்தன் அன்னதான கமிட்டி நிர்வாகத்தினர் கிராமப்பொதுமக்கள் செய்திருந்தனர். கோயில் பிரகார சுவர் முழுவதும் கல்வெட்டுடன் கூடிய பழமையான தமிழ் எழுத்துக்களால் வரலாறு பதிக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.