Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ... மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை விழா ஏப்.15ல் துவக்கம் மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை 1ல் அத்தி வரதர் வைபவம்
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை 1ல் அத்தி வரதர் வைபவம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2019
11:04

காஞ்சிபுரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, காஞ்சிபுரம் வரதராஜ பெரு மாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும், அத்தி வரதர் வைபவம், ஜூலை, 1ல் நடைபெற உள்ளதாக, கோவில் வட்டாரம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 100 கால் மண்டபத்தின் வடக்கே உள்ள அனந்த சரஸ் எனப்படும், தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில், நீராழி மண்டபத்திற்கு தென் திசையில், விமானத்துடன் கூடிய நான்கு கால் மண்டபம் உள்ளது.இந்த மண்டபத்தில், நீரில் மூழ்கியபடி, கருங்கற்களால் ஆன பாறைக்குள் மிகப்பெரிய அத்திமரத்தால் ஆன, பழைய அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.


இவரை, 40 ஆண்டு களுக்கு ஒரு முறை வெளியே எடுக்கப்பட்டு, 48 நாட்கள், பக்தர்களின் தரிசனத்திற்காகவும், பூஜைக்காகவும், வழிபாடு நடத்தப்படுகிறது.இதில், 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் அருள் பாலிப்பார். கடைசியாக, 1979ல், ஜூலை, 2ல், குளத்திலிருந்து அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டார். அந்த ஆண்டு, ஆக., 18ம் தேதி வரை விசேஷ வைபவம் நடந்தது.தற்போது, 40 ஆண்டுகளுக்கு பின், ஜூலை, 1ல், குளத்தில் இருந்து, அத்தி வரதர் எழுந்தருளும் வைபவம் நடைபெற உள்ளதாக, கோவில் வட்டாரம் தெரிவிக்கிறது.வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்தி வரதர் வைபவத்தை காண, உள்ளூர், வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடு என, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் எனப்படும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங் களில், 2019, ஜூலை, 15ல், அத்திவரதர், தெப்பக்குளத்தில் இருந்து எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வைபவம் நடைபெறவுள்ளதாக, கடந்த ஒரு ஆண்டாக வதந்தி பரவியது. அதற்கு மாறாக, ஜூலை, 1ல் வைபவம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar