மணவாள நகர்:மணவாள நகர், வள்ளலார் வளாகத்தில், வள்ளலார் பூச விழா, வரும், 13ம் தேதி நடைபெறுகிறது.
திருவள்ளூர் அடுத்த, மணவாள நகர் பகுதியில் உள்ளது வள்ளலார் வளாகம். இங்கு, மாதந் தோறும் உயிரிரக்க உணர்வாளர் மன்றம் சார்பில், வள்ளலாருக்கு பூச விழா நடந்து வருகிறது. இந்த மாத பங்குனி பூச விழா, 13ம் தேதி, காலை, 9:30 மணிக்கு, திருவிளக்கு ஏற்றுதல், சன்மார்க்க கொடி ஏற்றுதலுடன் விழா துவங்குகிறது.