திருவாடானை : தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் நேற்று முன்தினம் (ஏப்., 16ல்) ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஸ்ரீதேவி, பூ தேவியுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுசுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.