சிங்கம்புணரி:சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வைகாசித் திருவிழா விநாயகர் ஊர்வலத்துடன் துவங்கியது. இக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி மே 2 ம் தேதி கோவிலில் உள்ள சந்திவீரன்கூடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10:00 மணிக்கு வெள்ளி கேடயத்தில் வைத்து புதிய மாடுகள் பூட்டிய ரதத்தில் விநாயகர் கிராமத்திற்கு புறப்பட்டார்.கீழக்காடு ரோடு வழியாக வந்து சந்திவீரன் கூடத்திற்கு எழுந்தருளிய விநாயகருக்கு மக்கள் வழி நெடுக அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
சந்திவீரன் கூடத்தில் 10 நாட்கள் தங்கியிருக்கும் விநாயகருக்கு தினமும் கோயிலில் இருந்து நைவேத்தியம் வரவழைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். மே 12 ல் காலை 10:00 மணியளவில் விநாயகர் மீண்டும் கோவிலுக்கு திரும்புவார். அன்று பகல் 1:00 மணிக்கு சேவுகப்பெருமாள் கோவிலில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்குகிறது. இத்திருவிழா 10 நாள் மண்டகப்படியாக தொடர்ந்து நடைபெறும்.