விழுப்புரம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் விமான கோபுர பணிகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2019 03:05
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த மாரங்கியூர் ராமலிங்கேஸ்வரர் கோலில் விமான கோபுர பணிகள் துவங்கியது.விழுப்புரம் அடுத்த மாரங்கியூர் பர்வதவர்த்தனி உடனுறை ராமலிங்கேஸ்வரர் கோவில் திருப்பணி நடந்து வருகிறது.
இக்கோவில், ராஜகோபுரம் அமைக்கும் பணியை முன்னிட்டு நேற்று 9ல், காலை 8:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை நடந்தது.இதைத் தொடர்ந்து விநாயகர், முருகன், மூலவர், அம்மன், சண்டிகேஸ்வரர், விமான கோபுரம், திருநந்திகேஸ்வரர் சுவாமிகளுக்கு மண்டபம் அமைக்கும் பணிகளை கோவை கெளமார மட ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் துவங்கி வைத்து, மழை வேண்டி சிறப்பு பூஜை செய்தார்.அப்போது, விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் உரிமையாளர் ரமேஷ், கன்னிகாபரமேஸ்வரி துணிக்கடை உரிமையாளர் குணசேகரன், அரசு வழக்கறிஞர் சுப்பரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.