Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை மணப்பாக்கத்தில் நம்மாத்துல ... உத்திரமேரூர் ஔவையார் கோவிலில் கூழ் வார்த்தல் உத்திரமேரூர் ஔவையார் கோவிலில் கூழ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழா: ராமச்சந்திரன் வருகையால் உற்சாகம்
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழா: ராமச்சந்திரன் வருகையால் உற்சாகம்

பதிவு செய்த நாள்

13 மே
2019
12:05

பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நேற்று துவங்கியது. ராமச்சந்திரன் யானை வருகையால், பக்தர்கள் உற்சாகம் அடைந்தனர். கேரளா, திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா, உலக பிரசித்தி பெற்றது. இதில், அலங்கரிக்கப்பட்ட யானைகளின் அணிவகுப்பு மிகவும் பிரபலமானது.

யானைகள் அணிவகுப்புக்கு, பல ஆண்டுகளாகவே, 10.5 அடி உயரம் உள்ள, ராமச்சந்திரன் என்ற, 54 வயது யானை தலைமை வகிக்கிறது.பார்வை குறைபாடுஇந்த யானைக்கு, லேசான பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில், இருவரை, இந்த யானை மிதித்து கொன்றது. இதனால், திருச்சூர் பூரம் விழாவில் பங்கேற்க, ராமச்சந்திரன் யானைக்கு, கேரள அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, யானை உரிமையாளர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர்நீதி மன்றம், திருச்சூர் மாவட்ட கலெக்டர் முடிவெடுக்க உத்தரவிட்டது. யானையை பரிசோதித்த மருத்துவ குழுவினர், யானையின் உடல் நலம் நன்றாக உள்ளது. அதன் உடலில் எந்த காயமும் இல்லை; மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை என, அறிக்கை அளித்தனர்.இதையடுத்து திருச்சூர் பூரம் விழாவில், ராமச்சந்திரன் யானை பங்கேற்க, கலெக்டர் அனுமதி வழங்கினார். நேற்று காலை, நெய்தலைக்காவு பகவதி அம்மன் உருவச்சிலையை ஏந்தி, திருச்சூர் பூரம் விழாவில், ராமச்சந்திரன் யானை பங்கேற்றது.

வடக்குநாதர் கோவிலின், மேற்கு நடை வழியாக, கோவிலுக்குள் வந்த யானை, தெற்கு கோபுர நடை வழியாக வெளியே வந்து, மூன்று முறை தும்பிக்கையை உயர்த்தி, திருச்சூர் பூரம் திருவிழா, துவங்குவதாக அறிவித்தது.யானை சமயம்பூரம் திருவிழாவின் சிறப்பு அம்சமான, அலங்கரித்த யானைகளின் அணிவகுப்பில் குடைமாற்றம், இன்று மாலை நடக்கிறது. விழாவையொட்டி, இரண்டு நாட்களாக யானைகளின் ஆடை ஆபரண அலங்கார பொருட்களின் கண்காட்சியான, யானை சமயம் நடந்தது.இதை, பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.  - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலம்; மயிலம் முருகன் கோவில் சஷ்டி பூஜை வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மயிலம் வள்ளி, ... மேலும்
 
temple news
சிவகங்கை; பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலை புனிதப்படுத்தும் விதமாக ‛பவித்ர உற்சவ’ பூஜை ஆக., 1 ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நேற்று செவ்வாய்க்கிழமை, கருட பஞ்சமி விழாவை முன்னிட்டு ஸ்ரீ மலையப்ப சுவாமி தனது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி மலைப்பகுதியில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டதால் பக்தர்கள் மீண்டும் கோயிலுக்கு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவை கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar