பதிவு செய்த நாள்
18
மே
2019
04:05
உடுமலை:உடுமலை, மலையாண்டிபட்டணம் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா, நிறைவடைந்தது.
இக்கோவிலில், கடந்த 7ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. இதையடுத்து, கடந்த 14ம் தேதி காலையில், தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் மாலையில் கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
அன்று, இரவு, 9:00 மணிக்கு கும்பம் தாளித்து சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, 15ம் தேதி அதிகாலையில், பக்தர்கள் மாவிளக்கு படைத்தும், முளைப்பாரி எடுத்தும் வழிபாடு நடத்தினர். காலை, 7:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மாலையில் பூவோடு எடுக்கும் நிகழ்ச்சிகளும், இரவில், சக்தி கும்பம் கிணற்றுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்றுமுன்தினம் (மே., 16ல்), மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (மே., 17ல்) மகா அம்பாளுக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டு, திருவிழா நிறைவு பெற்றது.