திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் அமைந்த ஊர் திருக்கண்ணமங்கை. இங்குள்ள சுவாமிக்கு ’பத்தராவிப் பெருமாள்’ என்று பெயர். பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார். பக்தர்கள் மீது குழந்தைபோல அன்பு காட்டுவதால் ’பக்தவத்சலன்’ என்றும் பெயர் உண்டு. இங்கு தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.