Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருப்புக்கோட்டை பெருமாள் கோயில் ... காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை திரவுபதியம்மனுக்கு, 551 பால்குடங்கள் காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப உதவுங்கள்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவில் குளத்தில் தண்ணீர் நிரப்ப உதவுங்கள்

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2019
01:07

திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் குளத்தில், தண்ணீர் இல்லாததால், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்புங்கள் என, கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, இம்மாதம், 24 - 28ம் தேதி வரை நடக்கிறது.

இதில், 26 - 28ம் தேதி வரை, மூன்று நாட்கள், சரவணபொய்கை என்கிற திருக்குளத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும்.தற்போது, திருக்குளத்தில் தண்ணீர் இல்லாததால், கோவில் நிர்வாகம் ஒப்பந்தம் அடிப்படையில் டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து விடும் பணியை, 2ம் தேதி முதல், துவங்கியுள்ளது. நேற்று (ஜூலை., 8ல்) வரை, 300க்கும் மேற்பட்ட டிராக்டர், தண்ணீர் குளத்தில் விட்டும் போதிய தண்ணீர் இல்லாததால், தெப்பம் கட்டும் பணி நடக்கவில்லை.

இந்நிலையில், கோவில் நிர்வாகம், தெப்பத் திருவிழா நடத்துவதற்கு, பக்தர்கள் தங்களால் முடிந்த காணிக்கை செலுத்தி, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து குளத்தில் விடுவ தற்கு, உதவ வேண்டும் என, அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:குளத்தில் தண்ணீர் நிரப்புவதற்கு, கோவில் நிர்வாகம் சார்பில், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இருப்பினும், தெப்பம் கட்டுவதற்கும், மூன்று நாள் தெப்பத் திருவிழா நடத்துவதற்கும், போதுமான தண்ணீர் குளத்தில் இல்லாததால், பக்தர்கள் முன்வந்து டிராக்டர் மூலம் தண்ணீரை காணிக்கையாக கொண்டு வந்து குளத்தில் விட வேண்டும்.

இதுதவிர, பக்தர்கள் தண்ணீருக்காக காணிக்கையாக பணம் கொடுத்தாலும், நாங்கள், டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து நிரப்பிக் கொள்கிறோம்.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கைக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் உரிய ரசீது சம்பந்தப்பட்ட பக்தர் பெயரில் வழங்கப்படும்.எனவே, பக்தர்கள் குளத்தை தண்ணீர் கொண்டு வந்து நிரப்பு வதற்கு, தாராளமாக உதவ முன்வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; நாளை பத்மனாபபுரத்தில் இருந்து புறப்படும் நவராத்திரி பவனிக்காக சுசீந்திரத்தில் இருந்து ... மேலும்
 
temple news
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஐந்து நிலை ராஜ கோபுரம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; மொரட்டாண்டி சனீஸ்வர பகவான் கோவிலில் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் உருவச்சிலை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அக்., 2ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar