Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news க.க.சாவடியில் வலம் வந்தது அம்மன் தேர் திருவெண்ணெய்நல்லூர் டி.கொளத்தூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷகே விழா திருவெண்ணெய்நல்லூர் டி.கொளத்தூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி பூசாரிகள் நியமிக்க வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையத்தில் ஆடிக்குண்டம் திருவிழாவையொட்டி பூசாரிகள் நியமிக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2019
02:07

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக்குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பூசாரிகளை நியமிக்க வேண்டுமென, ஊர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளளனர்.மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா, இம்மாதம், 23 ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது.

விழாவை முன்னிட்டு, கோவிலைச் சுற்றியுள்ள ஊர் பொது மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி தலைமை வகித்தார். பரம்பரை அறங்காவலர் வசந்தா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நெல்லித்துறை, தேக்கம்பட்டி, அம்மன் புதுார், வேல் நகர், சமயபுரம், கூடுதுறைமலை, உப்புப்பள்ளம், காந்தி நகர், தொட்டதாசனுார், நஞ்சேகவுண்டன்புதுார் மற்றும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஊர் மக்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பங்கேற்ற மக்கள் கூறியதாவது: மிகவும் பழமை வாய்ந்த வனபத்ரகாளியம்மன் கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் உள்ள சிறிய சன்னிதிகளில் பூஜை செய்ய பூசாரிகள் இல்லை.

ஆடிக்குண்டம் விழா நடைபெற உள்ளதை அடுத்து, கோவில் மற்றும் சன்னிதிகளுக்கு உடன டியாக பூசாரிகளை நியமிக்க வேண்டும். கோவிலைச் சுற்றியும், சாலையிலும் பக்தர்கள் வசதிக்காக, 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க வசதிகள் செய்ய வேண்டும். கோவிலில் இருந்து தேக்கம்பட்டி சாலையில், காரமடை நீரேற்று நிலையம் வரை சாலையை அகலப் படுத்த வேண்டும். இவ்வாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.கோவில் உதவி கமிஷனர் ஹர்சினி, மக்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்றார். கோவில் பணியாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் பிரதோஷம் சிறப்பு மிக்கது. ஆதியில் அமுதம் கடைந்தபோது அதில் எழுந்த ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் 519வது ஆண்டு ஆனி தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
கோவை; வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். கார்டனில் அமைந்துள்ள மகா சங்கரா மினி ஹாலில் மாதந்தோறும் ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வேதாந்த தேசிகர் உற்சவர் பிரதிஷ்டை அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar