Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்திர கிரகணம்: நள்ளிரவு, 12:13 மணிக்கு ... ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு ஆடி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையாருக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2019
11:07

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் நேற்று இரவு பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

Default Image
Next News

தஞ்சாவூர் பெரியகோவிலில் பெரியநாயகி சமேத பெருவுடையாருக்கு திருக்கல்யாணம் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். இது போல் இவ்வாண்டும், நேற்று இரவு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மாலை ஆறு மணிக்கு பழங்கள், மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வெற்றிலை சீவல், பூக்கள் உள்ள சீர்வரிசையை பெண்கள் எடுத்து வந்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரகங்கள் முழங்க மாப்பிளை அழைப்பு உட்பட சம்பிரதாய சடங்குகள், ஹோமம் நடந்து முடிந்து பெரியநாயகி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரியநாயகி சமேத பெருவுடையார் திருக்கல்யாண கோலாத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அனைவருக்கும் திருக்கல்யாண பிரசாதங்களும், திருமணம் நடக்காத இளம் பெண், ஆண்களுக்கு பெரியநாயகி அம்மனுக்கு சாத்தப்பட்ட மாலையை அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது. அப்படி அணிவிப்பதால் அடுத்தாண்டு வரும் போது அவர்களுக்கு திருமணம் நடந்தே தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, கோவில் உதவி கமிஷனர் பரணிதரன் உட்பட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. வில்லியனுார் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar