* வயிறு புடைக்க சாப்பிடாதீர்கள். தொடர்ந்து இறைச்சி உண்ணாதீர்கள். ஏனெனில் உள்ளம் இருளாகி விடும். *பெற்றோருக்கு மதிப்பு கொடுங்கள். விருந்தினர்களை உபசரியுங்கள். * அறிஞர்களின் தொடர்பால் அளப்பரிய நன்மைகள் கிடைக்கும். * மற்றவர் மனதைப் புண்படுத்தாதீர்கள். இறந்தவர்களை இழிவாகப் பேசாதீர்கள். * இறைவன் நுண்ணறிவு மிக்கவனாகவும், நன்கு அறிபவனாகவும் இருக்கிறான். ஆற்றலும், அதிகாரமும் அவனுக்குரியவை. * இறைவன் உதவி செய்யும் போது, எந்தச் சக்தியாலும் உங்களை வெல்ல முடியாது.