வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவிலில் ஆடி ஆலங்கார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2019 12:07
வெள்ளகோவில்: மகாளியம்மன் திருக்கோவில் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு லட்சுமி, சரஸ்வதி,கருமாரியம்மன், ஆகிய அலங்காரத்தில் மாகாளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ராகி க்கூழ் வைத்து பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மாகாளியம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து வளாகத்தில் அமைந்துள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து பெண்களுக்கு மஞ்சள் கயிறு மற்றும் மஞ்சள் குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாகாளி அம்மனுக்கு வருகின்ற நான்கு வெள்ளிக் கிழமைகளிலும் ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிப்பார். வருகின்ற ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஆடிப்பூரத் திருவிழா மாகாளியம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடக்க உள்ளது. என மகாளியம்மன்கோவில்கோவில் வழிபாட்டு குழுவினர் தெரிவித்தனர்.