Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெங்கவல்லியில் கோவிலை அடைந்தது ... சின்னசேலத்தில் ஜோதிர்லிங்க தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் கோடி நன்மை தரும் ஆடி வெள்ளியில் வேண்டுதல் வைத்து திரளானோர் தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2019
03:07

சேலம்: கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி என்பர். அதற்கேற்ப, அம்மன் கோவில்களில், நேற்று (ஜூலை., 19ல்), நேர்த்திக்கடன் செலுத்தியும், வேண்டுதல் வைத்தும், திரளானோர் தரிசனம் செய்தனர்.

ஆடி முதல் வெள்ளியையொட்டி, சேலம், கோட்டை பெரியமாரியம்மன் கோவிலில், நேற்று (ஜூலை., 19ல்) காலை, 5:45 மணிக்கு, நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து, முத்தங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள், குடும்பம் சகித மாக வருகை தந்து, நீண்ட வரிசையில் நின்று, அம்மனை தரிசித்தனர். கன்னி பெண்கள், அம்மனுக்கு ஒற்றைமாலை சாத்துபடி செய்து, அங்குள்ள முகூர்த்தக்காலில், வளையல், மஞ்சள் கயிற்றை ஒருசேர கட்டி, திருமண வரம் வேண்டி வழிபட்டனர். வேண்டுதல் நிறை வேறிய தம்பதி, அம்மனுக்கு, இரட்டை மாலை அணிவித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதேபோல், குழந்தை வரம் வேண்டியும், தம்பதியினர் அம்மனை பிரார்த்தனை செய்தனர்.

மதியம், மீண்டும், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு வரை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு, அம்மனுக்கு, பூஜை நடந்தது. மதியம், தங்க கவச அலங்காரத்தில், அம்மன், காட்சியளித்தார். பக்தர்கள், தரிசனம் செய்ய, மதியம், 1:00 மணிக்கு, கோவில் நடை சாத்தப் படாமல், தொடர்ந்து, வழிபாடு நடந்தது. இரவு, கெஜலட்சுமி அலங்காரத்தில், செவ்வைமாரி அருள்பாலித்து, பக்தர்களை மகிமைப்படுத்தினார். மேள கச்சேரி சகிதமாக, தீபாராதனை செய்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இதுதவிர, சேலம் மாவட்டத்திலுள்ள, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, 17 அம்மன் கோவில்களில், ஆடிவெள்ளி முதல் நாளில், சிறப்பு அபி?ஷகம், ஆராதனை நடத்தி, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மழை வேண்டி குங்கும அர்ச்சனை: ஓமலூர், பெரிய மாரியம்மன், சந்தன காப்பு அலங்கார த்தில் அருள்பாலித்தார். மதியம், அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபட்டனர். மாலை, மழை வேண்டி, வருணபகவானுக்கு, 108 குங்கும அர்ச்சனை நடந்தது. அதில், திரளான சுமங்கலி பெண்கள் பங்கேற்றனர். தாரமங்கலம், கண்ணணூர் மாரியம்மன் கோவிலில், நேற்று முன் தினம் (ஜூலை., 18ல்) இரவு, கம்பம் நடும் விழா நடந்தது. நேற்று (ஜூலை., 19ல்), கொடிமரத் துக்கு பக்தர்கள் மஞ்சள் நீரூற்றி வழிபட்டனர். மூலவர் சன்னதியில், மாரியம்மன், காளியம் மன், சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar