நாமக்கல்: ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடப்பது வழக்கம்.அதன்படி, ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.