சாயல்குடி:சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள பூரண புஷ்கலா தேவி சமேத அய்யனார் கோயிலில் ஜூன் 13ல் கும்பாபிஷேகம் நடந்தது.
48 நாட்களுக்கு பின் மண்டலாபிஷேகம் விநாயகர், வீரையா, வீரமாகாளி, வடக்கு வாசல் செல்வி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.