* சிறிய தந்தை (தந்தையுடன் பிறந்தவர்) சிறிய தாய் (தாயுடன் பிறந்தவர்) இருவரும் நம் தாய், தந்தைக்கு நிகரானவர்கள். * அளவில் சிறியதாக இருந்தாலும் தொடர்ந்து செய்யும் நற்செயல்களே இறைவனுக்கு பிரியமானதாகும். * வட்டி என்ன தான் வருமானத்தை பெருக்கினாலும், அதன் முடிவு அழிந்து போகக்கூடியதே. வட்டி வாங்கி அதனை உண்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். * பெண் மக்களுக்கு திருமணத்தை சீக்கிரம் செய்யுங்கள். வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயல்களை விரைந்து செய்யுங்கள். * உங்களுக்கிடையே ஏற்படும் சண்டைகளை சமாதானம் மூலம் தீர்க்க முயலுங்கள். வாங்கிய கடனை உடனுக்குடன் திருப்பிச் செலுத்துங்கள்.