Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருத்தணியில் பங்குனி படி விழா! எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேத நாராயண சுவாமி கோவிலில் சூரிய பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2012
11:03

ஊத்துக்கோட்டை :நாகலாபுரம் வேத நாராயண சுவாமி கோவிலில் நடைபெற்ற, ஐந்து நாட்கள் சூரிய பூஜை விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். மகா விஷ்ணு மச்ச அவதாரம் எடுத்து, கடல் அடியில் பல ஆண்டுகளாக அசுரனுடன் யுத்தம் புரிந்தார். அதனால், அவரது உடல் மிகவும் குளிர்ச்சியடைந்தது. அப்போது அவரது உடல் வெப்பமடைவதற்காக, சூரிய பகவான் தன் ஒளிக் கதிர்களை அவரது உடலில் விழும்படி செய்கிறார். இது சூரிய பூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. ஊத்துக்கோட்டை அடுத்த, நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதத்தில் சில நாட்கள் மூலவர் நாராயணன் மீது சூரிய ஒளிக்கதிர்கள் விழுகிறது. இவ்விழா கடந்த, 23ம் தேதி துவங்கி, ஐந்து நாட்கள் நடந்தது. துவக்க நாள் மற்றும் அடுத்த நாள், 24ம் தேதி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மூலவர் மீது சூரிய ஒளி: மேற்கு திசையை பார்த்து நிற்கும் நாராயணன் மீது, 25ம் தேதி பாதங்களிலும், இரண்டாம் நாள் 26ம் தேதி நாபியிலும் (வயிறு), மூன்றாம் நாள், 27ம் தேதி சுவாமியின் சிரசிலும் (தலை) சூரிய ஒளிக்கதிர்கள் விழுந்தன. ராஜகோபுரத்தில் இருந்து, 600 அடி தூரத்தில் இருக்கும் மூலவர் மீது சூரிய ஒளிக் கதிர்கள் விழுந்த திவ்யரூப தரிசனத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு களித்தனர்.தெப்ப உற்சவம் கடந்த 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முதல் நாளில் சீதா சமேத ராமச்சந்திர சுவாமியும், அடுத்த இரு நாட்கள் வேதவல்லி சமேத வேத நாராயண சுவாமியும் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இவ்விழாவை காண ஆந்திரா, தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar