Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேத நாராயண சுவாமி கோவிலில் சூரிய ... தாயமங்கலம் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! தாயமங்கலம் கோயில் பங்குனி திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைப்பிடாரி அம்மன் கோவில் விழா: அலகு குத்தி பக்தர்கள் விமான ஊர்வலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2012
11:03

சேலம்: சேலம், குமாரசாமிப்பட்டி, எல்லைபிடாரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நேற்று, பக்தர்கள் அலகு குத்தி விமான ஊர்வலம் வந்தனர். சேலத்தில் குமாரசாமிப்பட்டியில் உள்ள, எல்லை பிடாரிஅம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் நடைபெறும். கடந்த 20ம் தேதி அம்மனுக்கு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அம்மனை வழிபட்டு செல்கின்றனர். நேற்று முன் தினம் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். நேற்று கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையலிட்டு வழிபாடு நடத்தினர். அம்மனிடம் வேண்டுதல் வைத்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அலகு குத்தல், அக்னி குண்டம் இறங்குதல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர். நேற்று, வேண்டுதல் நிறைவேற வேண்டியும், வேண்டுதல் நிறைவேறியவர்களும் அலகு குத்தி கொண்டு ஊர்வலமாக சென்றனர். பலர் அலகு குத்தி விமான ஊர்வலமாக அணிவகுத்து சென்றனர். இன்று, ஏராளமான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி வழிபாடு நடத்த உள்ளனர். முன்னதாக, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இரவு அம்மன் ஊர்வலமாக திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, பக்தர்கள் ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யஉள்ளனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் புகழேந்தி, உதவி ஆணையர் வரதராஜன், மண்டல உதவி தணிக்கை அலுவலர் பழனிச்சாமி, ஆய்வாளர் தமிழரசு ஆகியோர் தலைமையில் நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள புண்ணிய க்ஷேத்திரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹாபாதுகா மண்டபத்தில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், பவித்ர உத்சவம் 6ம் தேதி துவங்கி, வரும் 13ம் தேதி வரை ஏழு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் சந்திர கிரகணம் முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சந்திர கிரகணத்திற்குப் பிறகு கோவில் நடை இன்று திறக்கப்பட்டன.திருமலையில் ... மேலும்
 
temple news
கோவை; சாதுர்மாஸ்ய பூஜை மற்றும் சாதுர் மாதம் விரதத்தை ஸ்ரீ சக்கர மகாமேருபீடம் பிலாஸ்பூர்ஸ்ரீ சக்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar