Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகாம்பரநாதர் கோவிலில் அன்னப்பாவாடை ... காசி விஸ்வநாதர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மும்பை விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்
எழுத்தின் அளவு:
மும்பை விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி தரிசனம்

பதிவு செய்த நாள்

08 செப்
2019
01:09

 மும்பை:ஒரு நாள் பயணமாக, நேற்று மஹாராஷ்டிரா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மும்பை, விலே பார்லே விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தவர், மூன்று புதிய, மெட்ரோ ரயில் வழித்தடங்களையும்  துவக்கி வைத்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே, சட்டசபை தேர்தல், விரைவில் நடக்க உள்ளது.இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு நாள் பயணமாக, நேற்று மஹாராஷ்டிரா வந்தார்.  மும்பை விமான நிலையத்தில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, பா.ஜ., மாநில தலைவர், சந்திரகாந்த் பாட்டீல் ஆகியோர், பிரதமரை வரவேற்றனர்.விமான நிலையத்தில் இருந்து, நேராக விலே பார்லே பகுதியில் உள்ள விநாயகர்  கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டார்.பின், அங்கிருந்து, சுதந்திர போராட்ட வீரர், லோகமான்ய திலகரால் துவங்கப்பட்ட லோக்மான்ய சேவா சங்க கட்டடத்திற்கு சென்றார். அங்கு, திலகரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தார்.பின், பாந்த்ராவில் உள்ள, ஜியோ  வேர்ல்ட் சென்டர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரதமர் மோடி பேசியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாவை, மக்கள் ஊர்வலமாக நடத்தி கொண்டாட வேண்டும்என்ற வழக்கத்தை, லோகமான்ய திலகர் தான், முதன் முதலாக துவக்கி வைத்தார்.நுாறு  ஆண்டுகளுக்கு முன் அவர் உருவாக்கிய வழக்கம், இன்றும் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் போது,கடல் நீர் மாசுபடாமல் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு. பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகள், கடலில் கலக்காமல்  பாதுகாக்க வேண்டும். அதே போல, ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மழை வேண்டி எல்லை தெய்வத்திற்கு கறிச்சோறு மற்றும் அசைவ ... மேலும்
 
temple news
கர்நாடக மாநிலம், தார்வாட்டில் சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயில் பழமையும் பிரதான சிறப்பும் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.,22ல் துவங்கி அக்.,27 சூரசம்ஹாரம், அக்.,28ல் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
அருப்புக்கோட்டை; அருப்புக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் செல்வ விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar