Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்வமாரியம்மன் கோயில் முளைப்பாரி ... கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏழுமலையான் கோவில் புரட்டாசி வழிபாடு
எழுத்தின் அளவு:
ஏழுமலையான் கோவில் புரட்டாசி வழிபாடு

பதிவு செய்த நாள்

20 செப்
2019
12:09

உடுமலை: உடுமலை வனப்பகுதியில் அமைந்துள்ள, ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக பகுதியில், ஏழுமலையான் கோவில் உள்ளது. வனத்தில், 4.5 கி.மீ., துாரம் உள்ள இக்கோவிலுக்கு, புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டும், பக்தர்கள் செல்ல அனுமதியளிக்கப்படுகிறது.

இந்தாண்டு, வரும்,21 ம் தேதி, முதல் சனிக்கிழமை துவங்குகிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் பகுதியில், குடிநீர், வரிசை தடுப்புகள் என, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முழுவதும் மலைமேல் அமைந்துள்ளதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், வனப்பகுதி மற்றும் வன விலங்குகளுக்கும் சுற்றுசூழலுக்கும் கேடு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த, வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்களிடமிருந்து, பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்படும்; எனவே, துணி, சணல் பைகளை பக்தர்கள் கொண்டு வர வேண்டும்.வனப்பகுதியில் குப்பைகள் போடுவதை தடுக்க, வழி நெடுகிலும், குப்பை தொட்டிகள், விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

வனச்சரக அலுவலர் தனபாலன் கூறுகையில், பக்தர்கள் வனப்பகுதியில் குப்பைகள் வீசக்கூடாது. குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும். வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. துணி பைகளை மட்டுமே கொண்டு வர வேண்டும்.மலையடிவாரத்திலேயே, பிளாஸ்டிக் கவர்கள் பெற்றுக்கொண்டு, மக்கும் பை வழங்கப்படுகிறது. வாகனங்கள், வனத்துறை சோதனை சாவடி வரை மட்டுமே அனுமதிக்கப்படும். இவ்வாறு, வனச்சரக அலுவலர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பந்தலூர்; பந்தலூர் அருகே எருமாடு ஸ்ரீ துர்கா பகவதி ஆலய திருவிழாவில் தெய்யம் துள்ளல் , பக்தர்களைக் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar