Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் ... ராமேஸ்வரம் கோயிலில் ரூ.73.24 லட்சம் காணிக்கை ராமேஸ்வரம் கோயிலில் ரூ.73.24 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்மனாபபுரத்தில் நவராத்திரி பவனி புறப்பட்டது
எழுத்தின் அளவு:
பத்மனாபபுரத்தில் நவராத்திரி பவனி புறப்பட்டது

பதிவு செய்த நாள்

27 செப்
2019
11:09

நாகர்கோவில்: தமிழக, கேரள நட்புறவின் அடையாளமாக பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்பட்டது. அப்போது இருமாநில போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பத்மனாபபுரம் அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி தேவி கோயில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சிலை என்பது வரலாறு.

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் இங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் நிர்வாக வசதிக்காக திருவனந்தபுரத்துக்கு தலைநகர் மாற்றப்பட்ட பின், சரஸ்வதிதேவி சிலை பவனியாக எடுத்து செல்லப்பட்டு அங்கு நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும் மரபுப்படி இந்த விழா, இருமாநில நட்புறவின் அடையாளமாக நடக்கிறது. நேற்று காலை 7:50 மணிக்கு அரண்மனை உப்பரிகை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் கேரள அமைச்சர்கள் கடகம்பள்ளி சுரேந்திரன், கடந்நப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர், மன்னரின் வாளை எடுத்து குமரி மாவட்ட தேவசம் துணை ஆணையர் அன்புமணியிடம் கொடுத்தனர். அந்த வாள் ஏந்தியவர் முன்செல்ல, சரஸ்வதிதேவி யானை மீதும், முருகன், முன்னுதித்த நங்கை பல்லக்கிலும் வைக்கப்பட்டு பவனி புறப்பட்டது. பின்னர் அரண்மனை முன்வாசலில் பவனிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது தமிழக – கேரள போலீசார் துப்பாக்கிகை வானை நோக்கி பிடித்து மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர்களுடன் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார், உறுப்பினர்கள் சங்கரதாஸ், விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று குழித்துறையில் தங்கிய பவனி இன்று கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையை சென்றடையும். நாளை அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்றடையும். செப்., 29 நவராத்திரி பூஜை தொடங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar