திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் உள்ள பெரிய அய்யம்பாளைய த்தில் உள்ளது உத்தமராயப் பெருமாள் கோயில். இங்கு சதுர வடிவ கருவறையில் தேவியர் இன்றி, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராயப் பெருமாள் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார். இவரை பிரார்த்தனை செய்துகொண்டால், பேச்சுக்குறைபாடு நீங்குகிறதாம்.