பதிவு செய்த நாள்
03
அக்
2019
04:10
ஊட்டி: ஊட்டி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கடந்த செப்., 28ம் தேதி துவங்கியது. வரும், 7ம் தேதி வரை தினமும் மாலை, 6:30 மணிக்கு புவனேஸ்வரி, துர்கை, அன்னபூர்ணி, பார்வதி ராஜராஜேஸ்வரி, மகா லட்சுமி, அபிராமி, சரஸ்வதி உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. 8ம் தேதி காலை, 10:30 மணிக்கு அபிஷேகம், மாலை, 6:30 மணிக்கு திருவீதி உலா இரவு, 7:30 மணிக்கு மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே அம்பு போடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
ஊட்டி வேலிவியூ பகுதியில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி தினமும் மாலை, 5:00 மணிக்கு அலங்கார பூஜை நடக்கிறது. விஜயதசமி நாளான, 8ம் தேதி காலை, 8:00 மணிக்கு அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.