பதிவு செய்த நாள்
03
அக்
2019
04:10
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, கோவில் புதூரில் கரிவரதராஜபெருமாள் கோவில், 600 ஆண்டுகள் பழமையானது. இங்கு, ஆஞ்சநேயருக்கு தனி சன்னதி அமைந்து ள்ளது. வேணுகோபால சுவாமி, பாமா-ருக்மணியுடன் அருள்பாலிக்கிறார்.
புரட்டாசி மாதம், சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இக்கோவிலில், ஆண்டு தோறும் விஜயதசமியை முன்னிட்டு, அம்புசேர்வை திருவிழா விமரிசையாக நடப்பது வழக் கம். வரும், 8ல் நள்ளிரவு கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து குதிரை, கருடவாகனம், ஆஞ்சநேயர் வாகனம், சப்பரம் ஆகிய நான்கு வாகனங்களில் சுவாமி அழைப்புடன், அம்பு சேர்வை விழா துவங்குகிறது. முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வரும், நான்கு சுவாமி வாகனங்களும், 9ல் காலை, 6:00 மணிக்கு, புன்செய்புளியம்பட்டி பிளேக் மாரியம்மன் கோவி லை வந்தடைகிறது. அங்கு, குதிரை வாகனத்தில் கரிவரதராஜபெருமாள் எழுந்தருளி, அம்பு சேர்வை நடக்கிறது. 9:00 மணிக்கு கவாள சேவை, மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு பாவாடை பூஜை நடக்கிறது. அன்றிரவு, 8:00 மணிக்கு சுவாமி வாகனங்கள் மீண்டும், கரிவரத ராஜ பெருமாள் கோவிலை சென்றடைகிறது.