ராம்நகர்: தொலைந்து போன ஏழு தலை பாம்பின் சட்டை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்திலுள்ள மரிகவுடன தொட்டி கிராமத்தை சேர்ந்த புரபாளப்பா என்பவரின் தோட்டத்தில் சமீபத்தில் ஏழு தலை நாகப்பாம்பின் சட்டை கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் கோவில் கட்டி பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கிடையில் ஏழு தலை பாம்பு சட்டை திடீரென காணாமல் போனது; பக்தர்கள் வருத்தம் அடைந்தனர். கோவிலை சுற்றியுள்ள குப்பையை அகற்றிய போது அங்கு பாம்பு சட்டை கிடைத்தது. பக்தர்கள் மகிழ்ந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்து கிராமத்து மக்கள் ஏழு தலை பாம்பு சட்டைக்கு மீண்டும் பூஜை செய்து வழிபட்டு வருகின்றனர்.