Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பயம் போக்கும் வராஹி வழிபாடு இவரை வணங்கினால் மரண பயம்  நீங்கும்! இவரை வணங்கினால் மரண பயம் நீங்கும்!
முதல் பக்கம் » துளிகள்
சுகப்பிரசவம் தரும் குங்குமசுந்தரி அம்மன்
எழுத்தின் அளவு:
சுகப்பிரசவம் தரும் குங்குமசுந்தரி அம்மன்

பதிவு செய்த நாள்

15 அக்
2019
05:10

கும்பகோணம் அருகிலுள்ள உமையாள்புரம் குங்குமசுந்தரி அம்மன் சன்னதியில் வளைகாப்பு நடத்தினால் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் அமையும்.  ஒருமுறை படைப்புக் கடவுளான பிரம்மா சிவதரிசனத்திற்காக கைலாயம் சென்றார். அங்கிருந்த முருகனை பொருட்படுத்தவில்லை. முருகன் தடுத்த போது, ‘நானே படைப்புக் கடவுள்“ என ஆவணத்துடன் பதிலளித்தார். அதனால் வெகுண்ட முருகன், படைப்பிற்கு ஆதாரமான ‘ஓம்‘ என்னும் பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். பொருள் தெரியாமல் விழிக்கவே, பிரம்மாவின் படைக்கும் தொழிலைப் பறித்தார்.

மந்திரத்தின் விளக்கம் சிவனுக்கும் தெரியவில்லை. எனவே முருகன் தந்தையான சிவனுக்கு குருவாக உபதேசம் செய்தார். இத்தலமே ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையாக திகழ்கிறது. உபதேசம் பெற சிவன் வந்த போது, பார்வதி உடன் வந்தாள். அவளை குறிப்பிட்ட இடத்தில் இருக்கச் சொல்லிய சிவன், தான் மட்டும் சுவாமிமலைக்கு புறப்பட்டார். பார்வதி தங்கிய இத்தலமே ‘உமையாள் புரம்‘ எனப்பட்டது. இங்கு வாழ்ந்த  கமலா என்னும் பக்தையின் கணவர் உடல்நலக்குறைவால் உயிருக்கு போராடினார். தாலிபாக்கியம் நிலைக்க வேண்டி அந்தப்பெண் அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்தாள். அம்மன் அருளால் கணவரின் குணமடைந்தார். இதனால் அம்மனுக்கு ‘குங்கும சுந்தரி“ என பெயர் ஏற்பட்டது. அம்மனின் முன் மகாமேரு சக்கரம் உள்ளது. பெண்கள் சுமங்கலியாக வாழவும், கன்னிப்பெண்கள் நல்ல மணவாழ்வு அமையவும் குங்கும அர்ச்சனை செய்கின்றனர். சுகப்பிரசவம் ஏற்பட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பும் இங்கு நடத்துகின்றனர்.  இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர் வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகுசடைமுடிநாதர் கோயில் மற்றும் திவ்ய தேசங்களான கபிஸ்தலம், புள்ள பூதங்குடி உள்ளன.

* எப்படி செல்வது : கும்பகோணம் – திருவையாறு ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் உமையாள்புரம்

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar